டெல்லியில் திடீர் பதற்றம்!.. 4.5 மணி நேரம் நடந்த ரகசிய மீட்டிங்.. ஜூன் 2வது வாரத்தில் மோடி இறக்கப்போகும் மாஸ் ஸ்கெட்ச்.. அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு..!!

By Muthu Mani on வைகாசி 22, 2026

Spread the love

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துத் துறை சார்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் இணையமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக நடைபெற்றது. மாலை 5 மணிக்குத் தொடங்கிய இந்த உயர்நிலைக் கூட்டம் இரவு 9.30 மணி வரை, சுமார் நான்கரை மணி நேரம் நீடித்தது. இக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு, அதனை எதிர்கொள்வதற்கான உத்திகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் மேற்காசிய மோதல் குறித்தும், அதனால் இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய சவால்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சர்களுக்குப் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கிய பிரதமர் மோடி, அரசு அலுவலகங்களில் கோப்புகளைத் தாமதமின்றி விரைவாக முடிக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், தேவையற்ற சர்ச்சைகளில் அமைச்சர்கள் யாரும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று எச்சரித்த அவர், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நாம் ஆட்சியில் இருந்து வந்தாலும், கடந்த காலத்தைப் பார்க்காமல் எதிர்காலத்தை நோக்கி முன்னோக்கிப் பார்க்க வேண்டிய தருணம் இது என்று புதிய உத்வேகத்துடன் வலியுறுத்தினார்.

   

இந்த நீண்ட ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண்மை, தொழிலாளர் நலன், சாலைப் போக்குவரத்து, கார்ப்பரேட் விவகாரங்கள், வெளியுறவு, வர்த்தகம் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அமைச்சகங்கள், தங்களின் துறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்களை அளித்தன. வரும் ஜூன் மாத இரண்டாவது வாரத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என்ற பலத்த தகவல் வெளியாகி வரும் அரசியல் சூழலில், பிரதமர் நடத்திய இந்த அமைச்சர்கள் குழு கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.