BREAKING: அப்பா ஆனார் சீமான்.. கயல்விழிக்கு பிறந்த 2-வது குழந்தை.. உற்சாகத்தில் தம்பிகள்..!!

By Soundarya on வைகாசி 21, 2026

Spread the love

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியருக்கு இரண்டாவதாக அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கயல்விழிக்கு இன்று (மே 21, 2026) மதியம் குழந்தை பிறந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு மாவீரன் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

சீமானின் மனைவி கயல்விழி, முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் ஆவார். சமீபகாலமாக சீமானுடன் இணைந்து அரசியல் பொதுக்கூட்டங்களிலும், தேர்தல் பிரசாரங்களிலும் அவர் தீவிரமாகப் பங்கேற்று வந்தார். தற்போது தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான தகவலை அடுத்து, நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் எனப் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக சீமான் தம்பதியருக்கு தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்