புதுச்சேரி சட்டசபைக் கூட்டத்தொடரின் போது, தவெக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஒருவர், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்யின் புகைப்படத்தை அவையில் திடீரென உயர்த்திக் காண்பித்தார். இந்தச் செயல் அவையில் இருந்த மற்ற உறுப்பினர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், சபையின் விவாதங்களுக்கும் வழிவகுத்தது.
இதனைக் கண்டு அதிருப்தியடைந்த புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் , அந்த எம்.எல்.ஏ-வின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். “அவர் என்ன கடவுளா? எதற்காகச் சட்டமன்றத்திற்குள் அவருடைய புகைப்படத்தைக் காட்டுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பிய சபாநாயகர், அவையின் மாண்பைக் குலைக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அவரை எச்சரித்து அமர வைத்தார்.
சட்டமன்ற விதமுறைகளின்படி அவைக்குள் தேவையின்றிப் புகைப்படங்களையோ அல்லது பதாகைகளையோ காட்டுவது விதிமீறலாகும் என்பதைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், இனிவரும் காலங்களில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை விவாதிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு அறிவுறுத்தினார்.
