தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (தாட்கோ) ஆதிதிராவிட மக்கள் வாங்கியுள்ள கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தற்போது பலமாக எழுந்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தாட்கோ மூலம் ஆதிதிராவிட மக்கள் பெற்ற கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்கிற மிக முக்கியமான வாக்குறுதியைத் தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதனால் கடன் சுமையில் இருக்கும் தலித் மற்றும் ஆதிதிராவிட சமூக மக்கள் இந்த அறிவிப்பின் அடுத்தகட்ட நகர்வை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு எனத் தனி அமைச்சர் இன்னும் நியமிக்கப்படாததே இந்த அறிவிப்பு தாமதமாவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. விரைவில் நடைபெறவிருக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, இத்துறைக்கு புதிய அமைச்சர் முறைப்படி நியமிக்கப்பட்டவுடன் கடன் தள்ளுபடி செய்வதற்கான உரிய கோப்புகள் தயார் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
