புதிய ரேஷன் கார்டுகள்.. தமிழக மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… காலையிலேயே வெளியான அறிவிப்பு…!

By Nanthini on வைகாசி 20, 2026

Spread the love

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் கோரி விண்ணப்பித்துள்ள மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கவுள்ளது. புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அமைச்சர் வெங்கடரமணன் அவர்கள் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன் மூலம், கடந்த சில மாதங்களாக நிலுவையில் உள்ள சுமார் 2 லட்சம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மிக விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், தங்களின் புதிய குடும்ப அட்டைக்கான அறிவிப்பை எதிர்பார்த்து லட்சக்கணக்கான பொதுமக்கள் காத்திருந்த வேளையில் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் தங்களின் விண்ணப்ப நிலையை அறிய விரும்புவோர், தங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை (E-Sevai) மையங்களை உடனே அணுகிப் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.