அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ். செம்மலை அக்கட்சியிலிருந்து விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தற்போதைய தலைமை மீதான அதிருப்தி காரணமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறிய அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செம்மலை, “தற்போது கழகம் தாயற்ற பிள்ளை போல் தவிக்கிறது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் விரைவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவின் முக்கிய நிர்வாகியான KAS மூலம் அவர் முதலமைச்சர் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து காலம் தான் தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
