அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலை, அக்கட்சியிலிருந்து விலகி விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அமைச்சரான KAS மூலமாக, தவெக தலைவர் விஜய் அவர்களிடம் செம்மலை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அரசியல் நகர்வு தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக சேலம் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவிலிருந்து விலகிய பிறகு சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செம்மலை, தற்போதைய அதிமுக தலைமை மற்றும் நிலைமை குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். “கழகம் தற்போது தாயற்ற பிள்ளை போல் தவிக்கிறது” என்று குறிப்பிட்ட அவர், தனது அரசியல் எதிர்காலம் மற்றும் அடுத்தகட்ட பயணம் குறித்து “காலம் தான் தீர்மானிக்கும்” எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த அதிரடி முடிவு அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
