பொய் வழக்குகள், 6 ஆண்டு கால சித்திரவதை..! கரும்புள்ளி வைத்த நீதிமன்றத் தேதி… காட்டுக்குள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து இன்ஜினியர் எடுத்த பகீர் முடிவு..!!

By Soundarya on வைகாசி 17, 2026

Spread the love

33 வயதான பொறியாளர் பிரத்யும்ன் யாதவ், புதியா மாதா கோவில் அருகிலுள்ள குஸ்மி காட்டுப் பகுதியில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். உயிரிழப்பதற்கு முன் அவர் பதிவு செய்த உருக்கமான வீடியோவில், “நான் இறப்பதற்கான நேரம் இதுவல்ல. என் மனைவியின் கொடுமைகள் என்னை உடைத்துவிட்டன. வாழ்க்கையில் நான் நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டேன். என் பெற்றோர் இதனால் தவிப்பார்கள் என்று எனக்குத் தெரியும்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஜூன் 2 அன்று அர்பிதா யாதவ் என்பவரைத் திருமணம் செய்த இவருக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்குப் பின் வெறும் 3 மாதங்களே கணவர் வீட்டில் வாழ்ந்த அர்பிதா, பின்னர் பிரத்யும்ன் வேலை பார்த்த டெல்லிக்குச் சென்றார். அங்கு ஒருமுறை அவர் பிரத்யும்னின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றதாகவும், அதன் பிறகு தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்ற அர்பிதா, பிரத்யும்ன் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் பராமரிப்புத் தொகை கோரி பொய் வழக்குகளைத் தொடர்ந்தார். இதனால் கடந்த 6 ஆண்டுகளாக நீதிமன்றத் வாய்தாக்களுக்கு அலைந்து, கடுமையான மன உளைச்சலில் பிரத்யும்ன் வாழ்ந்து வந்துள்ளார். நீதிமன்றத் தேதிகளுக்காகத் தனது அலுவலகத்தில் அவர் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டியிருந்தது. கடந்த மே 12 அன்று பத்ரௌனா நீதிமன்றத்தில் விசாரணை நடந்த நிலையில், அடுத்த விசாரணைத் தேதி ஜூலை 21-க்கு மாற்றப்பட்டது. இது அவரது மன அழுத்தத்தை மேலும் அதிகரித்தது. இந்த நிலையில், இந்தூரில் உள்ள தனது வேலைக்குத் திரும்பும் வழியில், புதியா மாதா கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டு, குஸ்மி காட்டிற்குள் சென்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வீடியோவை பதிவேற்றிவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளார்.

   

இறப்பதற்கு முன் அவர் பேசிய வீடியோவில், “நான் வாழ்க்கைப் போரில் தோற்றுவிட்டேன். என் வலிக்கு என் மனைவியே காரணம். அண்ணே, நம் பெற்றோருக்கு ஒரு மகன் இல்லை என்ற குறையை ஒருபோதும் தெரியவிடாதே. வயதான காலத்தில் மகன் தங்களைக் காப்பாற்றுவான் என்று ஒவ்வொரு பெற்றோரும் நினைப்பார்கள், ஆனால் நான் அவர்களுக்கு வேதனையைத் தருகிறேன்” என்று கண்ணீருடன் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் இது போன்ற ஒருதலைப்பட்சமான சட்டங்கள் மற்றும் பொய் வழக்குகளால் லட்சக்கணக்கான ஆண்கள் பாதிக்கப்பட்டு, நீதி கிடைக்காமல் தவித்து வருவது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.