BREAKING: மகளிருக்கு மாதம் ரூ.2,500… சற்றுமுன் அமைச்சர் புதிய அறிவிப்பு…!

By Nanthini on வைகாசி 16, 2026

Spread the love

தமிழகத்தில் பெண்களுக்கான ரூ.2,500 உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்பு மாநில பட்ஜெட்டிற்கு பிறகே வெளியிடப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக முதலமைச்சர் விஜய் அவர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மாநிலத்தில் உள்ள சட்டவிரோத குவாரிகளைக் கண்டறியும் கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், விதிமீறல்களில் ஈடுபடும் அனைத்து குவாரிகளும் விரைவில் முழுமையாக மூடப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். அமைச்சரின் இந்த அடுத்தடுத்த அறிவிப்புகள் தற்பொழுது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.