தமிழக முதல்வர் விஜய் மாமா..! “இதுக்கு உடனே ஆக்ஷன் எடுங்க”… நெல்லை சிறுமியின் உருக்கமான வேண்டுகோள்..!!

By Soundarya on வைகாசி 15, 2026

Spread the love

தாமிரபரணி ஆற்றின் அவலநிலையைச் சுட்டிக்காட்டி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆறு, தற்போது கடும் மாசடைந்து காணப்படுவதை அந்தச் சிறுமி தனது வீடியோவில் வேதனையுடன் விவரித்துள்ளார். சீர்குலைந்து வரும் இந்த இயற்கை வளத்தை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை அந்தச் சிறுமி தனது மழலை மொழியில் உலகிற்கு உணர்த்தியுள்ளார்.

“விஜய் மாமா.. இதுக்கு ஆக்ஷன் எடுங்க” என்று தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அந்தச் சிறுமி விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள் தற்பொழுது வைரலாகி வருகிறது. தாமிரபரணி ஆற்றைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். ஒரு சிறுமியின் இந்தச் சமூக அக்கறை கலந்த வீடியோ, அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.