“காப்பாற்றுங்கள்!… பள்ளிக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்… கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் போலீஸ்?… கண்ணீருடன் கெஞ்சும் குடும்பத்தினர்… கான்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

By Muthu Mani on வைகாசி 15, 2026

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பித்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை, அபிஷேக் என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். மனிதநேயமற்ற இந்தச் செயலால் அச்சமடைந்த அந்த சிறுமி, எப்படியோ தப்பித்து தனது வீட்டிற்குச் சென்று நடந்தவற்றை பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் உடனடியாக உள்ளூர் காவல் சாவடியில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், இவ்வளவு கடுமையான குற்றம் நடந்தும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கு பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் இது எழுப்பியுள்ளது.

   

பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது விசாரணை நடத்தக் கோரியும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். “பூமியில் மனிதர்களுக்குப் பதில் மிருகங்களா பிறக்கின்றன?” என மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.