BREAKING: மீண்டும் பாராமதியில் விமான விபத்து!… பெரும் பரபரப்பு…!!!

By Muthu Mani on வைகாசி 13, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் பாராமதி அருகேயுள்ள கோஜுபாவி கிராமத்தில் பயிற்சி விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சியில் இருந்த விமானி சிறிய ரக விமானத்தை இயக்கியபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்விளக்குக் கம்பத்தின் மீது மோதியதே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது; இதில் அதிர்ஷ்டவசமாக விமானி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் இதே பாராமதி பகுதியில் நிகழ்ந்த மற்றொரு கோர விமான விபத்தில் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.