மீண்டும் தாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? தெறிக்கும் பாஸ் பாக்குறீங்களா..? அமெரிக்காவிற்கு இறுதி எச்சரிக்கை… உலக நாடுகளை அதிரவைக்கும் ஈரான்..!!

By Swetha on வைகாசி 12, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்போது போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இருப்பினும், இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாததால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தச் சூழலில், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. தற்போது ஈரான் தனது யுரேனியத்தை 60 சதவீதம் வரை செறிவூட்டியுள்ளது. ஒருவேளை அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கினால், அதை அணு ஆயுதம் தயாரிப்பதற்குத் தேவையான 90 சதவீத செறிவூட்டல் அளவிற்கு உயர்த்துவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

   

இது குறித்து ஈரானின் நாடாளுமன்ற கமிஷன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்கா மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தினால், 90 சதவீத யுரேனிய செறிவூட்டலைத் தொடங்குவது ஈரானின் முதன்மையான விருப்பங்களில் ஒன்றாக இருக்கும் என்றும், இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விரிவான ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.