தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது முதல் கையெழுத்திட்ட திட்டங்களில் ஒன்றான ‘போதைப்பொருள் தடுப்புப் படை’ அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 65 போதைப்பொருள் தடுப்புப் படை காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 படைகளும், சென்னையில் 12 இடங்களிலும், கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட 8 மாநகராட்சிகளில் தலா 2 இடங்களிலும் இந்தப் படைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
