தமிழகம் முழுவதும் கலெக்டர்களுக்கு உடனே செய்ய… முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!!

By Swetha on வைகாசி 12, 2026

Spread the love

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், பொதுமக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த கையோடு, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மாவட்ட ஆட்சியர்களுக்கு விஜய் பிறப்பிக்கும் முதல் உத்தரவு இது என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் விநியோகத்தில் எவ்வித தொய்வும் இருக்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம், நிர்வாக ரீதியான பணிகளில் தனது கவனத்தை முதலமைச்சர் விஜய் செலுத்தத் தொடங்கியிருப்பது பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.