தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரை இன்று நேரில் சந்தித்துப் பேச உள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் அமைந்துள்ள சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு இந்த முக்கியச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்திருந்த நிலையில், இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு புதிய கூட்டணிக்கான அச்சாரம் இதுவோ என்ற விவாதங்களும் தற்போது மேலெழுந்துள்ளன.
