தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் ஒருபோதும் தீர்வாகாது என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருக்கும் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் நிலவும் தாமதத்தால் வேதனையடைந்த தூத்துக்குடி மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த கிளைச் செயலாளர் இசக்கியப்பன் (41), தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது அவரது குடும்பத்தினரையும் கட்சியினரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் மீதான அன்பு என்பது ஆக்கப்பூர்வமான செயல்களாக வெளிப்பட வேண்டுமே தவிர, இதுபோன்ற விபரீத முடிவுகள் அன்பு செலுத்தும் தலைவருக்கும், அந்தத் தொண்டரை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கும் ஈடுகட்ட முடியாத இழப்பையே தரும் என்பதை உணர்ந்து, எத்தகைய சூழலிலும் தற்கொலை முயற்சியைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.
