“ஐயோ என் பொண்ணு சாக்கடையில் விழுந்து செத்திடுச்சு” பெற்ற மகளையே பலிகொடுத்த காம இச்சை.. ‘லிவ்-இன்’ பார்ட்னருக்காகத் தாய் ஆடிய பகீர் கொலை நாடகம்..!!

By Soundarya on வைகாசி 12, 2026

Spread the love

அஞ்சலி சிங் என்ற பெண் தனது கணவரைப் பிரிந்து, ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அலோகேஷ் (அல்கேஷ்) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழத் தொடங்கியுள்ளார். அஞ்சலிக்கு அவரது முதல் திருமணத்தின் மூலம் காவ்யா சிங் என்ற மூன்று வயது பெண் குழந்தை இருந்தது. ஆனால், அஞ்சலியின் கள்ளக்காதலன் அலோகேஷிற்கு அந்தக் குழந்தையைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், ஒருநாள் தனது மகள் தவறி சாக்கடையில் விழுந்து காணாமல் போய்விட்டதாக அஞ்சலி நாடகமாடினார். ஆனால், காவல்துறையினர் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதில், அஞ்சலி தனது பெற்ற மகளை ஒரு ஏரியில் மூழ்கடித்துக் கொலை செய்யும் அதிர்ச்சிகரமான காட்சிகள் பதிவாகியிருந்தன.

   

தனது கள்ளக்காதலனுடன் எந்தத் தடையும் இன்றி வாழ்வதற்காக, பெற்ற தாயே மூன்று வயதுக் குழந்தையைக் கொன்ற இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காம வலையில் சிக்கித் தாய்மைக்கே துரோகம் செய்த அஞ்சலியையும், அதற்குத் தூண்டுகோலாக இருந்த அவரது காதலனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.