கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பாலம்பட்டி மற்றும் கொடுகூர் இடையே வெறும் 500 மீட்டர் இடைவெளியில், அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் பெட்ஷீட்டில் சுற்றப்பட்டு பெட்ரோல் ஊற்றி மிகக் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. ஒரே பாணியில் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த இரட்டைப் படுகொலைகள் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து திமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் குற்றச் செயல்கள் மீது சமரசமற்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த சி.எம். விஜய், தற்போது அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ளனர். காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் புதிய அரசுக்கு சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
