கல்யாணம் முடித்த கையோடு.. காதலனை வரவழைத்து ஆணுறுப்பை துண்டித்த பெண்… கரும்புத் தோட்டத்தில் ரத்த வெள்ளம்.. பகீர் சம்பவம்..!!

By Soundarya on வைகாசி 10, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயியில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதீர் குமார் மற்றும் ஆர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதல் விவகாரம் இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த மே 6-ஆம் தேதி சுதீர் குமார் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த ஆர்த்தி, மே 9-ஆம் தேதி சுதீரைத் தந்திரமாக கரும்புத் தோட்டத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு வைத்து யாரும் எதிர்பாராத விதமாக, தன்னிடம் இருந்த பிளேடால் சுதீரின் ஆண் உறுப்பைத் துண்டித்து கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்தக் கொடூரச் செயலால் படுகாயமடைந்த சுதீர் குமார், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருமணம் ஆகி மூன்று நாட்களே ஆன நிலையில், கணவனின் இந்த நிலையைத் துளியும் தாங்கிக்கொள்ள முடியாமல் அவரது மனைவி கதறித் துடிக்கிறார். “குடும்ப வாரிசு எப்படி உருவாகும்? இனி எங்கள் வாழ்க்கை என்னவாகும்?” என்று அவர் கேட்கும் கேள்விகள் காண்போரை கண்கலங்க வைக்கின்றன. காதலன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்ற ஆத்திரத்தில் ஒரு பெண் எடுத்த இந்த விபரீத முடிவு, அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது.