தமிழகத்தின் 17-ஆவது அமைச்சரவையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏ-வுமான ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தவெக-வின் தேர்தல் வியூகங்களில் முக்கியப் பங்காற்றிய ஆதவ் அர்ஜுனா, தற்போது அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளது அக்கட்சியின் தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆதவ் அர்ஜுனாவுடன் சேர்த்து புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட மொத்தம் 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். விளையாட்டு மற்றும் சமூக மேம்பாட்டுத் துறைகளில் ஆர்வம் கொண்ட இவருக்கு, புதிய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு நிகழ்வு, தமிழக அரசியலில் ஒரு புதிய அதிகாரப் பகிர்வின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய்யின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக ஆதவ் அர்ஜுனா தனது அரசுப் பணியை இன்று முதல் முறைப்படி தொடங்கியுள்ளார்.
