புதிய தேர்தல் நடத்துவதே நல்லது… TVK பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெறும்… ஸ்ரீதர் வேம்பு அதிரடி.!!

By Soundarya on வைகாசி 7, 2026

Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நிலவும் அரசியல் இழுபறிகள் குறித்து சோஹோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் (X) தளத்தில் முக்கியக் கருத்தைப் பகிர்ந்துள்ளார். தற்போதைய சூழலில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும், அது பல்வேறு அழுத்தங்கள் மற்றும் முரண்பாடுகளால் ஒரு நிலையற்ற அரசாங்கமாகவே இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்திற்கு ஒரு நிலையான ஆட்சி அவசியம் என்பதால், தற்போதைய சூழல் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்பதே அவரது கருத்தாக உள்ளது.

இதற்குத் தீர்வாக, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு, மீண்டும் ஒரு புதிய தேர்தலை நடத்துவதே சிறந்த வழியாக இருக்கும் என்று அவர் முன்மொழிந்துள்ளார். அவ்வாறு தேர்தல் நடத்தப்படும் போது, “வாக்குக்கு பணம்” கொடுக்கும் முறையை மிகக் கடுமையான சட்ட அமலாக்கத்தின் மூலம் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் மட்டுமே மக்கள் தங்களின் உண்மையான பிரதிநிதிகளை எவ்விதத் தூண்டுதலும் இன்றித் தேர்ந்தெடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

மேலும், ஒருவேளை புதிய தேர்தல் நடத்தப்பட்டால், தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் (Super Majority) வெற்றி பெற்று மீண்டும் வரும் என்று தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தவெக-வை எதிர்க்க விரும்பினால், அவை இணைந்து போட்டியிடட்டும் என்றும், அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.