விஜய் டிவியின் பிரபல சீரியல்களுள் ஒன்று ‘சரவணன் மீனாட்சி’ . இத்தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. சரவணன் மீனாட்சி என்றாலே அதில் நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீஜா அவர்களின் முகம் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.
அந்த அளவிற்கு இவர்கள் இந்த சீரியல் மூலம் பிரபலமடைந்தனர். சீரியலில் ஜோடியாக இருந்த இவர்கள் நிஜ வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் ஏராளம். இவர்கள் இருவரும் முதலில் நாங்க நல்ல நண்பர்கள் தான் என்று கூறினார்கள்.
திடீரென திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு தன் மனைவியுடன் இணைந்து ‘மாப்பிள்ளை’ என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்கள்.
இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் ஸ்பெஷலாக செந்தில் தனது மனைவியுடன் இணைந்து போட்டோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இப்பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…
View this post on Instagram