பனையூரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஜான் ஆரோக்கியசாமி மூலமாக பாமகவிற்கு ஆதரவு கோரி அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகித்து வரும் பாமக, வரும் காலங்களில் அக்கூட்டணியிலேயே நீடிப்பதா அல்லது விலகி புதிய அரசியல் கணக்குகளைத் தொடங்குவதா என்பது குறித்துத் தனது எம்.எல்.ஏ-க்களின் கருத்துக்களை அன்புமணி கேட்டறிந்ததாகத் தெரிகிறது. விஜய்யின் இந்தத் திடீர் அழைப்பால் தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், பாமகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்த அறிவிப்பை அன்புமணி விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
