ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் ரியான் பராக், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியின் போது டிரெஸ்ஸிங் ரூமில் ‘வேப்பிங்’ (Vaping) எனப்படும் மின்னணு சிகரெட்டைப் பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் உள்ள கேமராக்களில் இந்த காட்சி எதேச்சையாகப் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பிசிசிஐ (BCCI) இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்தது.
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ரியான் பராக்கிற்கு அவரது போட்டி ஊதியத்தில் 25 சதவீதத்தை அபராதமாக விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டிரெஸ்ஸிங் ரூம் போன்ற பொதுவான மற்றும் விளையாட்டு வீரர்களுக்குரிய கண்ணியமான இடத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டது ஒழுங்கீனமானது எனக் கண்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் மீதான தடையைத் தவிர்த்து அபராதத்துடன் நிர்வாகம் விட்டுள்ளது அந்த அணிக்கும் ரசிகர்களுக்கும் ஒரு நிம்மதியைத் தந்துள்ளது.
இளம் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு சர்வதேச தரத்திலான வீரர், இத்தகைய செயல்களில் ஈடுபட்டது தவறு என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தற்போது ஐபிஎல் 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கியத் தூணாக இருக்கும் ரியான் பராக் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கியது அந்த அணியின் பிம்பத்திற்குச் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அபராதத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளதால் அவர் தொடர்ந்து விளையாடத் தடை ஏதுமில்லை.
