நாளை (மே 1) முதல் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வதில் புதிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இதன்படி, நகரங்களில் ஒரு சிலிண்டர் புக் செய்த பிறகு, அடுத்த சிலிண்டரை புக் செய்வதற்கான கால இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இந்த இடைவெளி 45 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் தங்களின் பயோமெட்ரிக் சோதனையை உறுதி செய்ய வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு நேரடியாகக் குழாய் மூலம் கேஸ் (Piped Gas) பெறுவோர், தங்களிடம் உள்ள சிலிண்டர்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றன.
