சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் இல்லத்தின் முன்பு, 71 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அவரைச் சந்திக்க வேண்டுமென்று பிடிவாதமாக அமர்ந்து காத்திருந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டைச் சுற்றியே வந்த அந்தப் பெண்மணி, தனது விருப்பத்திற்குரிய நடிகரான விஜய்யை நேரில் பார்த்தால் மட்டுமே அந்த இடத்தை விட்டு நகர்வேன் என்று உறுதியாகக் கூறி வாசலிலேயே தவம் கிடந்தார்.
நீண்ட நேரமாகியும் அவர் அங்கிருந்து செல்ல மறுத்ததால், இல்லத்தின் பாதுகாவலர்கள் மற்றும் காவல்துறையினர் அவருக்கு எடுத்துரைத்து சமாதானப்படுத்த முயன்றனர். ஒரு மூதாட்டி தனது வயதையும் பொருட்படுத்தாமல் நடிகர் விஜய் மீதான பாசத்தினால் வீட்டின் முன் காத்திருந்த இந்தக் காட்சிகள் அங்கிருந்தவர்களால் படம்பிடிக்கப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.
