“இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?… ஒரு சிம் வாங்கினா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்… தெலுங்கானாவில் ஒரு செம சர்ப்ரைஸ்”…!!!

By Muthu Mani on சித்திரை 29, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் தம்மபேட்டாவில் மொபைல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ள சலுகை இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. உலகளாவிய ஈரான் மோதல் சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நிலவி வரும் நிலையில், ஏர்டெல் சேவை மையம் இத்தகைய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பிற நெட்வொர்க்கில் இருந்து ஏர்டெல்-க்கு மாறி ரூ.350-க்கு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த ஒரு லிட்டர் பெட்ரோல் ‘ஜாக்பாட்’ சலுகையாக வழங்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றாலும், இது வெறும் வியாபார உத்தி மட்டுமே என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகக் கடை உரிமையாளர்கள் தங்களின் லாபத்தைப் பணயம் வைத்து இப்போட்டியில் இறங்கியுள்ளனர். அதேவேளையில், தெலுங்கானா சிவில் சப்ளைத்துறை அதிகாரிகள் மாநிலத்தில் 45 நாட்கள் வரை தாராளமாகப் பயன்படுத்தும் அளவிற்கு 18,500 கிலோலிட்டர் எரிபொருள் இருப்பு உள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். உலகளாவிய வதந்திகளால் மக்கள் பீதியடைந்து அதிகப்படியான பெட்ரோலை வாங்குவதே தற்காலிக நெருக்கடிக்குக் காரணம் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

   

ஆந்திராவில் 1500-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், 450 பங்க்குகள் மட்டுமே தற்காலிகமாகச் செயல்படவில்லை என அம்மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், மக்களின் எரிபொருள் தேவையையும் அச்சத்தையும் ஒரு வியாபார வாய்ப்பாக மாற்றி, பெட்ரோலை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் இழுக்கும் இந்த மொபைல் கடையின் முயற்சி ‘ஸ்மார்ட் மூவ்’ ஆகப் பார்க்கப்பட்டாலும், இது சந்தைப் போட்டியின் உச்சத்தையே காட்டுகிறது.