2-வது கல்யாணத்திற்கு ஆசைப்பட்டு… மாமன் மகளைக் கொன்று புதைத்த கணவன்… திடுக்கிட வைக்கும் பகீர் வாக்குமூலம்…!!

By Soundarya on சித்திரை 28, 2026

Spread the love

பள்ளியில் ஒன்றாகப் படித்து வந்த ஒரு இளைஞனுக்கும், அவனது தாய்மாமன் மகளுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதலை அறிந்த இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவர்கள் ஒன்றாகப் படிப்பவதற்கும் தடை விதித்தனர். ஆனால், குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இறுதியில் முறைப்படி திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு, அந்த இளைஞனின் குடும்பத்தினர் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். இந்த விவகாரம் தெரியவந்ததும் தம்பதியரிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருநாள் தகுந்த சமயம் பார்த்துத் தனது மனைவியைத் தனியான இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞன், அவரைத் துடிதுடிக்கக் கொலை செய்துவிட்டு, உடலை அங்கேயே மறைத்து வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

   

மகளைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, மருமகன் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர். காவல்துறையினர் அந்த இளைஞனைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் தனது மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு உடைந்து போனார். இதனையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். உறவுமுறைக்குள் காதல் கொண்டு மணம் முடித்த தம்பதியின் வாழ்க்கை இவ்வளவு கொடூரமான முடிவைச் சந்தித்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.