12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்… ₹35,000+ சம்பளம்… 731 காலிப்பணியிடங்கள்… இன்றே அப்ளை பண்ணுங்க.. SSC மெகா அறிவிப்பு…!!!

By Muthu Mani on சித்திரை 28, 2026

Spread the love

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 731 ஸ்டெனோகிராபர் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.08.2026 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இப்பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்குத் தொடக்க ஊதியமாக ரூ.35,400 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்விற்குத் தகுதியுள்ளவர்கள் https://ssc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக வரும் மே 15, 2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்சி/எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு மற்றும் சுருக்கெழுத்துத் திறன் தேர்வு (Skill Test) ஆகிய இரண்டு நிலைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.