flight

“ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விலை…”! 20,000 விமானங்களை ரத்து செய்த விமான நிறுவனம்… ஷாக்கான பயணிகள்…!!

By Devi Ramu on சித்திரை 26, 2026

Spread the love

சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக விமான எரிபொருள் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால், உலகெங்கிலும் சுமார் 20,000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மோதலால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, ஒரு பேரல் எரிபொருள் விலை 8,500 ரூபாயிலிருந்து 19,000 ரூபாய் வரை எகிறியுள்ளது. இதன் விளைவாக, லஃப்தான்சா போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களும் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தி பயணிகளுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளன.

விமான எரிபொருள் விலை உயர்வால் டிக்கெட் கட்டணங்கள் மட்டுமின்றி, லக்கேஜ் மற்றும் இதர சேவைகளுக்கான கட்டணங்களும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏர் பிரான்ஸ், கேஎல்எம் போன்ற நிறுவனங்கள் நீண்ட தூர பயணக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதோடு, பல ஐரோப்பிய விமான சேவைகளையும் நிறுத்தியுள்ளன. நைஜீரிய ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் விலை குறையாவிட்டால் மொத்த சேவைகளையும் நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளன. இனிவரும் காலங்களில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர்கள் கூடுதல் பணச் செலவு மற்றும் கடைசி நேர விமான ரத்து நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்பதால், பயணிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.