அலெர்ட்..! கார் சாவியை ஒருபோதும் குழந்தைங்ககிட்ட கொடுக்காதீங்க… உயிருக்குப் போராடிய ஒரு வயதுக் குழந்தை… வைரலாகும் பகீர் வீடியோ..!!

By Soundarya on சித்திரை 25, 2026

Spread the love

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களாக கார் சாவிகளைக் கொடுப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. தீபாலி தோஷி என்ற பெண், தனது ஒரு வயதுக் குழந்தையுடன் காரில் இருந்தபோது, கவனக்குறைவாக கார் சாவியை அந்தக் குழந்தையிடம் கொடுத்துள்ளார். எதிர்பாராத விதமாக, குழந்தை காரின் உட்புறமாகத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டது. கதவு மூடப்பட்டிருந்ததால் வெளியிலிருந்து எவ்வளவோ முயன்றும் கதவைத் திறக்க முடியவில்லை. குழந்தை உள்ளே இருப்பதைப் பார்த்து குடும்பத்தினர் பெரும் பதற்றமடைந்தனர்.

கண்ணாடி மூடப்பட்டிருந்ததால் உள்ளே இருப்பவர்களுக்கு வெளியே பேசுவது கேட்கவில்லை. குழந்தைக்கு இது ஒரு விளையாட்டு போலத் தோன்றியதால், வெளியே இருப்பவர்கள் சைகை காட்டியும் குழந்தையினால் கதவைத் திறக்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக, தீபாலியிடம் காரின் மாற்றுச் சாவி (Spare Key) இருந்தது. அலுவலகத்தில் இருந்த அந்தச் சாவியை உடனடியாக வரவழைத்து, அதன் மூலம் காரைத் திறந்து குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். ஒருவேளை மாற்றுச் சாவி இல்லையென்றால், கண்ணாடியை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் என்று அந்தத் தாய் பதிவிட்டுள்ளார்.

   

இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தீபாலி, “இது எனக்குக் கிடைத்த ஒரு பயங்கரமான பாடம்” என்று குறிப்பிட்டுள்ளார். கார் சாவியை ஒருபோதும் குழந்தைகளிடம் விளையாடக் கொடுக்காதீர்கள் என்றும், எப்போதும் ஒரு மாற்றுச் சாவியைத் தயாராக வைத்திருங்கள் என்றும் அவர் மற்ற பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் பலரும் இந்தக் குழந்தையின் பாதுகாப்பைக் கண்டு கவலை தெரிவித்ததுடன், பெற்றோர்களின் விழிப்புணர்வு எவ்வளவு முக்கியம் என்பதையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.