மரணப் பிடியில் ஈரான் உச்ச தலைவர்..? முகம் சிதைந்து, பேச்சு பறிபோன பரிதாபம்… காலையும் இழக்கும் நிலையில் மோஜ்தபா கமேனி..!!

By Soundarya on சித்திரை 24, 2026

Spread the love

ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தாக்குதலில் சிக்கிய அவருக்கு, காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் இதுவரை மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது காலின் நிலை மோசமாக இருப்பதால், தேவைப்பட்டால் அவருக்கு செயற்கை கால் பொருத்தப்படலாம் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலின் போது அவரது முகம் மற்றும் உதடு பகுதிகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அவரால் தற்போது பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முகச் சீரமைப்புக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஈரானின் மிக உயரிய அதிகாரத்தில் இருக்கும் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சூழல், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.