வங்கிக்கு வெளியே விதிகளை மீறி வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று தடுத்த 50 வயது பாதுகாப்பு ஊழியர் (Security Guard) கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், தற்போது கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Just because security person is not father of a police officer…
FIR gets registered with wrong CAR Number, inspite of mentioning correct number in complaint and giving photo of CAR with number plate…
Accused not gets arrested even on 3rd day from date of incident inspite of… pic.twitter.com/MvImxfWxWd
— Advocate Neelam Bhargava Ram (@nbramllb) April 23, 2026
சம்பவத்தன்று, வங்கிக்கு வெளியே தவறான இடத்தில் வாகனம் நிறுத்தப்படுவதை அந்த முதியவர் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர்கள், அவரை மிக மோசமான முறையில் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், முதியவர் மீதான இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
