“இங்கே கார் பார்க்கிங் கிடையாது” தடுத்த வங்கி காவலாளிக்கு நேர்ந்த கொடூரம்… ஐசியூவில் உயிருக்குப் போராடும் 50 வயது முதியவர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on சித்திரை 24, 2026

Spread the love

வங்கிக்கு வெளியே விதிகளை மீறி வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று தடுத்த 50 வயது பாதுகாப்பு ஊழியர் (Security Guard) கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், தற்போது கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று, வங்கிக்கு வெளியே தவறான இடத்தில் வாகனம் நிறுத்தப்படுவதை அந்த முதியவர் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர்கள், அவரை மிக மோசமான முறையில் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், முதியவர் மீதான இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.