அடக்கடவுளே அறிவே இல்லையா..? அந்தரங்க உறுப்புக்குள் இருந்த USB வயர்… 15 வயது சிறுவன் சொன்ன காரணத்தை கேட்டு அதிர்ந்து போன மருத்துவர்..!!

By Soundarya on சித்திரை 23, 2026

Spread the love

லண்டனில் 15 வயது சிறுவன் ஒருவன், விசித்திரமான ஆர்வக் கோளாறால் செய்த காரியம் அவனது உயிருக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. தனது சிறுநீரகக் குழாயின் நீளத்தை அளக்க வேண்டும் என்ற விபரீத எண்ணத்தில், ஒரு யுஎஸ்பி (USB) சார்ஜர் கேபிளைத் தனது அந்தரங்க உறுப்புக்குள் நுழைத்துள்ளான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த வயர் உள்ளே சென்றவுடன் மிக மோசமாகச் சிக்கிக்கொண்டு முடிச்சாக மாறியது.

அந்த வயரை வெளியே எடுக்க முடியாமல் போனதோடு, ரத்தம் கசியத் தொடங்கியதால் அச்சமடைந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். எக்ஸ்ரே (X-ray) எடுத்துப் பார்த்த மருத்துவர்கள், அந்த வயர் சிக்கியிருந்த விதத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர். சாதாரண முறையில் அதை வெளியே எடுப்பது சாத்தியமில்லை என்பதால், மருத்துவர்கள் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அந்தரங்க உறுப்புக்கும் மலக்குடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் துளையிட்டு, பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே அந்த வயர் வெளியே எடுக்கப்பட்டது. இதுபோன்ற விபரீத சோதனைகள் உயிருக்கே உலைய வைக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.