“தோப்புக்கரணம் போடு…” மது போதையில் இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூரம்…. சிவகங்கையில் பயங்கரம்…!!

By Devi Ramu on சித்திரை 18, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி அருகே மது போதையில் ஏற்பட்ட சிறு தகராறு கொலையில் முடிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தச் சென்றபோது, சரித்திர பதிவேடு குற்றவாளியான சதீஷ்குமார் தலைமையிலான கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது. போதையில் இருந்த அந்த கும்பல், லோகநாதனையும் அவரது நண்பர்களையும் வலுக்கட்டாயமாகத் தோப்புக்கரணம் போடுமாறு கூறி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் லோகநாதனை கத்தியால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். பின்னர் அவரது உடலைக் கண்மாயில் வீசிவிட்டு காரில் தப்பியோடினர். தகவலறிந்து வந்த திருமயம் போலீசார், லோகநாதனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.