“விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்…” 1.20 லட்சம் வரை மானியம்…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!!

By Devi Ramu on சித்திரை 17, 2026

Spread the love

தமிழகத்தில் விவசாயப் பணிகளை எளிதாக்கும் நோக்கில், களை எடுக்கும் இயந்திரங்களை வாங்க மாநில அரசு மிகப்பெரிய அளவிலான மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது. வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு 70 சதவீதம் வரை அல்லது அதிகபட்சமாக ₹1.20 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, குதிரைத்திறன் அடிப்படையில் இந்த மானியத் தொகை நேரடியாக வழங்கப்பட உள்ளது.

பெண் விவசாயிகள் மற்றும் இதர பிரிவினருக்கும் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை ஊக்கத்தொகை கிடைப்பதால், நவீன கருவிகளை வாங்குவதில் உள்ள நிதி நெருக்கடி குறையும். இயந்திரத்தின் திறன் 2 HP முதல் 7.5 HP-க்கு மேல் வரை எனப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப ₹32,000 முதல் ₹1,19,000 வரை சலுகைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உழவர் நலத்துறை எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால், ஆட்கள் பற்றாக்குறையைச் சமாளித்து விளைச்சலைப் பெருக்க முடியும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.