“இனி கொலைகள் கிடையாது.. ஆனா”… ட்ரம்ப் வெளியிட்ட அந்த ஒரு பதிவு.. அதிர்ச்சியில் உலக நாடுகள்…. ஏப்ரல் 22-க்கு பிறகு என்ன நடக்கும்..?

By Nanthini on சித்திரை 17, 2026

Spread the love

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவினர். இதற்குப் பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தீவிரத் தாக்குதலில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது எட்டப்பட்டுள்ள இந்த போர் நிறுத்தம் பொதுமக்களிடையே சிறு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பினர் கண்ணியத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்வார்கள் என்று தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். “இனி கொலைகள் இருக்கக்கூடாது; இறுதியில் அமைதி நிலைபெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ள அவர், இந்த வாய்ப்பை ஹிஸ்புல்லா சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் அது அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

   

மறுபுறம், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதன் மூலம் எண்ணெய் விலை மற்றும் ஹார்மஸ் நீரிணை வழி பயணம் போன்ற உலகளாவிய வர்த்தகச் சிக்கல்கள் தீரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், யுரேனியத்தை ஒப்படைப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஈரான் தரப்பு இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

   

தற்போது அமலில் உள்ள இந்த போர் நிறுத்தம் ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், போர் மீண்டும் தொடங்கும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஒருவேளை பேச்சுவார்த்தை வெற்றி பெற்று அமைதி ஒப்பந்தம் உறுதியானால், அதில் கையெழுத்திட அதிபர் ட்ரம்ப் நேரடியாக பாகிஸ்தான் செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்தர அமைதி திரும்புமா என்பதைத் தீர்மானிக்கும் முக்கியத் தருணமாகப் பார்க்கப்படுகிறது.