ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

By Rajeshwari on சித்திரை 15, 2026

Spread the love

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில அளவிலான ஆணழகன் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற திலீப்பிற்கும், அவரது ஜிம்மிற்கு பயிற்சி பெற வந்த 42 வயதான யோகிதா என்ற பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

மேலும் நாளடைவில் யோகிதா தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார். திலீப்பின் வீட்டைத் தனது பெயருக்கு எழுதி வைக்கக் கோரியும், சொத்துக்களைப் பறிக்கும் நோக்கிலும் அவர் தொடர் நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இருவரும் இனி சந்திக்கக் கூடாது என்று எழுதி வாங்கப்பட்டுள்ளது. இருப்பினும், யோகிதா விடாமல் திலீப்பிற்குத் தொல்லை கொடுத்து வந்ததால், மனமுடைந்த திலீப் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

   

இதனால் திலீப்பின் தற்கொலை குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், திலீப்பின் செல்போன் உரையாடல்களைக் கைப்பற்றியுள்ள போலீசார், யோகிதா மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு ரகசியக் காதலால் ஏற்பட்ட டார்ச்சர், ஒரு திறமையான இளைஞனின் உயிரைப் பறித்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.