பல்கேரியாவைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசி பாபா வாங்காவின் 2026-ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. உலகம் ஒரு மிகப்பெரிய பொருளாதார அதிர்வைச் சந்திக்க நேரிடும் என்பதே அவரது கணிப்புகளின் சாரமாக உள்ளது. வேலைவாய்ப்புகள் குறைதல், பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைதல் மற்றும் வங்கி அமைப்புகள் மீதான நம்பிக்கை சரிவு போன்ற காரணங்களால் காகித நாணயம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பெரும் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பொருளாதார நெருக்கடி காலங்களில் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி மற்றும் செம்பு போன்ற உலோகங்களை நோக்கித் திரும்புவார்கள் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, செம்பு உலோகத்தின் தேவை அதிகரித்து, அது “புதிய தங்கம்” என்று அழைக்கப்படும் நிலைக்கு உயரக்கூடும் என்ற தகவல் வைரலாகி வருகிறது. உலக நாடுகளுக்கு இடையேயான அரசியல் பதற்றங்கள் மற்றும் போட்டிகள் ஏற்கனவே அழுத்தத்தில் உள்ள உலகப் பொருளாதாரத்திற்கு கூடுதல் நெருக்கடியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலநிலை மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத இயற்கை பேரழிவுகளால் உலகளாவிய சப்ளை செயின் (Supply Chain) பாதிக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனுடன், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி சில துறைகளில் பெரிய அளவில் வேலை இழப்புகளை உருவாக்கி, சமூக ரீதியான அச்சத்தை அதிகரிக்கக்கூடும். இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் இணைந்து உலகப் பொருளாதாரத்தின் கட்டமைப்பையே மாற்றியமைக்கும் சூழல் உருவாகலாம் என்று சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது.
1911-ல் பிறந்து 1996-ல் மறைந்த பாபா வாங்கா, தனது வாழ்நாளில் கணித்த பல விஷயங்கள் உண்மையாகியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். 1960-களில் அறிவியல் ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றிய இவரது கணிப்புகள், ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இவை வெறும் ஊகங்களா அல்லது உண்மையான தீர்க்கதரிசனமா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் உலக நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு இவை பேசுபொருளாவது மட்டும் தொடர்கதையாக உள்ளது.
