லண்டனில் செவிலியராகப் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி பெண்ணான எல்டா எஸ்டீவன்ஸ் (61), தன்னைச் சக ஊழியர் ஒருவர் ‘ஆன்ட்டி’ (Auntie) என்று அழைத்ததற்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் அதிரடித் தீர்ப்பு கிடைத்துள்ளது. பணியிடத்தில் தன்னை இவ்வாறு அழைப்பது தனது வயதையும் பாலினத்தையும் சுட்டிக்காட்டி இழிவுபடுத்தும் செயல் என்றும், இது ஒரு வகையான பாகுபாடு என்றும் கூறி அவர் நீதிமன்றத்தை நாடினார். நீண்ட தூர உறவினர்களோ அல்லது நெருக்கமானவர்களோ அல்லாத ஒருவர், தன்னை இப்படி அழைப்பது தொழில்முறை கண்ணியத்திற்கு எதிரானது என்று அவர் வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், எல்டா எஸ்டீவன்ஸின் வாதத்தை ஏற்றுக்கொண்டது. பணியிடத்தில் ஒருவரை ‘ஆன்ட்டி’ என்று அழைப்பது வயது மற்றும் பாலின ரீதியான பாகுபாட்டிற்கு சமம் என்றும், அது சம்பந்தப்பட்ட நபரின் மனதைப் புண்படுத்தும் செயல் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட எல்டா எஸ்டீவன்ஸுக்கு சுமார் ₹1.8 லட்சம் (சுமார் 1,700 பவுண்டுகள்) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அவர் பணியாற்றிய மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு பணியிடங்களில் மற்றவர்களை எப்படிக் கண்ணியமாக அழைக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறது.
