உங்க வீரத்தை இங்கே காட்டாதீங்க… அவங்களை தட்டிக்கேட்க துணிச்சல் இல்ல.. EPS-ஐ கடுமையாக சாடிய அன்பில் மகேஷ்..!!

By Soundarya on சித்திரை 9, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்தது அதிமுகதான் எனக் கடுமையாகச் சாடியுள்ளார். பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு விலக்கு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒருமுறையாவது பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்தது உண்டா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அதிமுகவினர், அவரது உயிர்மூச்சான இருமொழிக் கொள்கையைக் காக்கத் தவறிவிட்டதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசிடம் தனது உரிமைக் குரலைக் காட்ட வேண்டிய வீரத்தை விடுத்து, மாநில முதலமைச்சர் மீது மலிவான விமர்சனங்களை எடப்பாடி பழனிசாமி முன்வைத்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநில அரசின் நலன்களுக்காகவும், மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் மத்திய அரசைத் தட்டிக்கேட்கத் துணிச்சல் இல்லாதவர்கள், இப்போது அரசியல் லாபத்திற்காகத் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அவர் சாடியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்தச் செயல்பாடுகள் அவரது அரசியல் பலவீனத்தையேக் காட்டுவதாக அன்பில் மகேஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.