ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹18.5 கோடி) கட்டணம் விதிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. போர் இழப்பீடுகளை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ஈரான், வசூலிக்கப்படும் இந்தக் கட்டணத்தை ஓமன் நாட்டுடன் பகிர்ந்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திடீர் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இதர பொருட்களின் விலை கணிசமாக உயரக்கூடும் என்பதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன.
