“வானில் வட்டமடித்த மரணத் தூதுவன்”… அமெரிக்காவின் ‘டூம்ஸ்டே’ விமானம் திடீரென வெளியே வந்தது ஏன்?… பீதியில் உலகம்…!

By Nanthini on சித்திரை 8, 2026

Spread the love

அமெரிக்காவின் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு மையமான நெப்ராஸ்காவின் ஆஃபட் (Offutt) விமானப்படைத் தளத்திற்கு மேலே, அந்நாட்டின் அதிபர் அவசரகாலங்களில் பயன்படுத்தும் Boeing E-4B “Nightwatch” எனப்படும் ‘டூம்ஸ்டே’ (Doomsday) விமானம் திடீரென ஆறு முறை வட்டமடித்தது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுதத் தாக்குதல்கள் மற்றும் மின்காந்த அலைகளின் (EMP) பாதிப்பிலிருந்து தப்பிக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானம், ஒரு நடமாடும் போர் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படும் திறன் கொண்டது. நாட்டின் மிக நெருக்கடியான சூழலில் அதிபர், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் வானத்திலிருந்தே இராணுவத்தை வழிநடத்த இது பயன்படுத்தப்படும் என்பதால், இதன் திடீர் வருகை பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

குறிப்பாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த அணு ஆயுதத் தடுப்பு விமானம் வான்பரப்பில் தென்பட்டிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணப் பயணங்களை விட, இத்தகைய விமானங்கள் பொதுவெளியில் தென்படுவது பெரும்பாலும் மிக முக்கியமான பாதுகாப்பு ஒத்திகை அல்லது உடனடி போர் அபாயத்தின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. இந்த விமானத்தின் நடமாட்டத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேச அரசியல் களத்தில் இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.