அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்களில், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் அருள்முருகன் அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேர்தல் நடைமுறைகளில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், அதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், ஒரு கட்சியின் சின்னத்தில் மற்றொரு கூட்டணிக் கட்சி வேட்பாளர் போட்டியிடுவதில் இருந்த சட்ட சிக்கல்கள் நீக்கப்பட்டு, அத்தகைய நடைமுறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
