BREAKING: திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்… செம ஷாக்கில் ஸ்டாலின்…!

By Rajeshwari on சித்திரை 3, 2026

Spread the love

வேலூர் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக விளங்கிய ப.ச.சுரேஷ் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்தார்.

மேலும் வேலூர் மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலாளர் மறைந்த ப.சண்முகத்தின் மகனான இவர், தற்போது மாதனூர் ஒன்றியச் சேர்மனாகப் பதவி வகித்து வருகிறார். திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் வேலூர் பகுதியில், நீண்ட கால பாரம்பரியம் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் இவ்வாறு கட்சி மாறியிருப்பது அக்கட்சிக்குச் சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

   

இதனால் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிமுகவின் இரட்டை இலைத் துண்டினை அணிவித்து ப.ச.சுரேஷை எடப்பாடி பழனிசாமி முறைப்படி கட்சியில் வரவேற்றார். அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்த இபிஎஸ், வரவிருக்கும் தேர்தல் பணிகளைக் கருத்தில் கொண்டு வேலூர் மாவட்டத்தின் வெற்றிக்காகத் தீவிரமாக உழைக்குமாறு அறிவுறுத்தினார்.