“சரணடையும் வரை விடமாட்டோம்” டிரம்பின் 3 வார கெடுவுக்கு ஈரான் கொடுத்த மரண அடி பதிலடி…!!!

By Soundarya on சித்திரை 2, 2026

Spread the love

 அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் இன்று 34-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த 2 முதல் 3 வாரங்களில் ஈரான் மீது “மிகக் கடுமையான” தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார். அமெரிக்கப் படைகள் தங்களின் இலக்கை அடைய மிக நெருக்கமாக இருப்பதாகவும், இந்தத் தாக்குதல்கள் மூலம் ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் முற்றிலும் சிதைக்கப்படும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

அதிபர் டிரம்பின் இந்த எச்சரிக்கைக்கு ஈரான் ராணுவம் கடும் எதிர்வினையாற்றியுள்ளது. அமெரிக்கா அவமானப்பட்டு நிபந்தனையற்ற முறையில் சரணடையும் வரை இந்தப் போர் ஓயாது என்று ஈரான் ராணுவத் தளபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்றும், தங்கள் நாட்டின் இறையாண்மையைக் காக்க எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்பதாகவும் ஈரான் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

   

உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ள ஈரான், அங்குக் கப்பல் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது. இதற்குப் பழிவாங்கும் விதமாக, வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரு தரப்பிலும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர் பதற்றம் நிலவுகிறது.