“பெண்கள் மீது சிறு துரும்பு பட்டாலும் சும்மா விடமாட்டோம்” இந்த அச்சுறுத்தலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்… ஆவேசமான த.வெ.க ஆதவ் அர்ஜுனா ..!!

By Soundarya on சித்திரை 1, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், பெண் தொண்டர்கள் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு திட்டமிட்ட சதி என்று சந்தேகிப்பதாகக் கூறியுள்ள கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, த.வெ.க-வை நோக்கி வரும் பெண்களின் பாதுகாப்பு தங்களுக்கு மிக முக்கியம் என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

எங்கள் கட்சியை நம்பி வரும் பெண்கள் மீது சிறு துரும்பு பட்டாலும், அதை நாங்கள் சும்மா விடமாட்டோம் என்று அவர் எச்சரித்துள்ளார். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்குப் பயப்படப் போவதில்லை என்றும், இச்சம்பவத்திற்குப் பின்னால் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.