போபாலிலிருந்து ஜபல்பூர் நோக்கி ரயிலில் பயணித்த ஜென்ஜி என்ற இளம்பெண்ணுக்கு, சக பயணி ஒருவரால் நேர்ந்த கசப்பான அனுபவம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனக்காக முன்பதிவு செய்யப்பட்ட ஜன்னல் ஓர இருக்கைக்குச் சென்றபோது, அங்கு ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். அது தனது இருக்கை என்று அந்தப் பெண் ஆதாரத்துடன் எடுத்துக்கூறியும், அந்த நபர் அதைக் கேட்காமல் அப்பெண்ணை ஒருமையில் பேசி மிரட்டியுள்ளார். மேலும், ரயில்வே அதிகாரிகளை (TC) அழைத்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அப்பெண்ணைப் பயமுறுத்தவும் முயன்றுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த முதியவர் பின் இருக்கையில் இருந்த சிறுவர்களிடம் தனது இடத்தை மாற்றிக்கொண்டு, அங்கிருந்தபடியே அந்தப் பெண்ணைத் தனது இருக்கையிலிருந்து வலுக்கட்டாயமாகத் தள்ளியுள்ளார். இதில் அந்தப் பெண் ரயிலில் கீழே விழும் நிலைக்குச் சென்று மயிரிழையில் உயிர் தப்பினார். முதியவரின் இந்த அநாகரீகமான செயலால் ஆத்திரமடைந்த அங்கிருந்த சிறுவர்கள், தங்கள் இருக்கையைத் திரும்பக் கேட்டபோதும் அவர் அவர்களிடமும் சண்டையிட்டு ரயிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோவை சூரஜ் குமார் பௌத் என்பவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அது வைரலானது. இதைக் கவனித்த போபால் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டியுள்ள நெட்டிசன்கள், பொது இடங்களில் ஒரு ஆணின் உண்மையான குணம் அவர் பெண்களிடம் நடந்துகொள்ளும் முறையில்தான் இருக்கிறது என அந்த முதியவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“Girl harassed by a Sanki Uncle.” 😡
The moment she tried to sit in her window seat, an uncle started shouting at her rudely and kept warning her repeatedly.
Why do they forcibly try to occupy others’ seats just because of their age? Lol. pic.twitter.com/qf1g0McuN7
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) March 30, 2026
