ஓடும் இரயிலில் ஏற முயன்றவருக்கு நேர்ந்த கதி… சாவையே வென்று வந்த பயணி… சமூக வலைதளங்களை அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

By Rajeshwari on பங்குனி 28, 2026

Spread the love

மும்பை போரிவலி இரயில் நிலையத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஒரு நபரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. நடைமேடையில் ஓடிக்கொண்டிருந்த இரயிலில் ஏற முயன்ற ஒரு பயணி, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி இரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

மேலும் சில நொடிகளில் விபரீதம் நடந்திருக்கும் என்ற சூழலில், அங்கு பணியில் இருந்த டிசி மிகுந்த சாமர்த்தியத்துடன் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, அந்தப் பயணியை இழுத்து உயிர் தப்ப வைத்தார். வெறும் 3 வினாடிகளில் மரணத்தின் விளிம்பிற்குச் சென்று திரும்பிய அந்தப் பயணி, தனது உயிரைக் காப்பாற்றிய அந்த அதிகாரிக்கு கைகுலுக்கி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

   

“>

   

இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடமை உணர்வோடு செயல்பட்ட அந்த இரயில்வே அதிகாரியின் துணிச்சலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். “கடவுள் மனித உருவில் வந்தார்” என்று சமூக வலைதளவாசிகள் அந்த அதிகாரியைப் புகழ்ந்து தள்ளுகின்றனர். அதே சமயம், ஓடும் இரயிலில் ஏறுவது அல்லது இறங்குவது போன்ற ஆபத்தான செயல்களைத் தவிர்க்குமாறு இரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.